கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி


கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி
x

கோப்புப்படம்

நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி வங்கியில் வைப்புநிதியாக போடப்பட்டது. அதில் கிடைக்கும் வட்டித்தொகை மூலம் மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவி தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வந்தது.

வைப்பு நிதி ரூ.5 கோடியில் 30-வது புத்தக கண்காட்சியை 10.1.2007 அன்று திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில், ' கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்- பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்து அந்த சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ.4 கோடியில் இருந்து வரும் வட்டி தொகையில் 2007-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவி தொகை வழங்கப்படுகிறது.

2005-ம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 95 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story