மின்னல் தாக்கி தென்னையில் தீ

மின்னல் தாக்கி தென்னை மரத்தில் தீப்பிடித்தது
சிவகங்கை நகரில் நேற்று மாலை வேளையில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் தூரலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. அப்போது சிவகங்கை காமாட்சி அம்மன் கோவிலின் பின்பக்கம் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் மரம் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை தீயணைக்கும் படை அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து தென்னை மரத்தில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





