அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள்; லாரி செட்டுக்கு சீல்


அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள்; லாரி செட்டுக்கு சீல்
x

அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் வைத்திருந்த லாரி செட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் சரவண சுந்தர் (வயது 37), அரவிந்த் (20) ஆகிய 2 பேரும் லாரி செட் வைத்துள்ளனர். இவர்கள் லாரி செட்டில் அனுமதியின்றி 63 பண்டல்கள் பட்டாசு வைத்திருந்ததாக வச்கக்காரப்பட்டி போலீசார் பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து லாரி செட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.



Next Story