குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதி


குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதி
x

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்று சாரல் மழை விட்டு விட்டு தூறியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் இன்று மாலை திடீரென மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவியில் ஓரமாக நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதித்தனர்.

அருவியின் மையப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல போலீசார் தடை விதித்தனர். ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

1 More update

Related Tags :
Next Story