ஆவடியில் உணவு திருவிழா


ஆவடியில் உணவு திருவிழா
x

ஆவடியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக உணவு திருவிழா 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

திருவள்ளூர்

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட எச்.வி.எப். மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக உணவு திருவிழா 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இதை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று திறந்துவைத்ததார். இங்கு 100 அரங்குகளில் ஏறக்குறைய 150 நாடுகளின் உணவு கலாசாரங்கள், உணவு பழக்க வழக்கங்கள், உணவு தயாரிக்கும் முறைகள், இவையெல்லாம் ஒன்றாய் இணைந்து பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி, விளையாட்டுப்போட்டிகள், திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த மூன்று நாள் நிகழ்வுகளில் முதல் நாளான நேற்று உலக ஐஸ்கிரீம் நாளை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பாக ஆவின் பொருட்களை வைத்து உலகின் உயரமான பலூடா ஐஸ்கிரீம் தயாரிக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ், ஆவடி மாநகராட்சி துணை மேயர் எஸ்.சூரியகுமார், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், உள்ளாட்சி பிரதிநிதிகள், லேடர் செழியன், உணவு பாதூப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story