சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிமேகலா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பொன்.ஆனந்தராஜ், செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு அமைப்பாளர்கள், ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், ஊழியர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசே வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story