சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் துரை, காசி, ரீட்டாமேரி, இணை செயலாளர்கள் மோகனா, வெண்மதி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வீமன் வரவேற்றார். மாநில தணிக்கையாளர் தேசிங்கு கோரிக்கை விளக்க உரையாற்றினார். துணைத்தலைவர் ஜெயந்தி நிறைவுரையாற்றினார். சத்துணவு ஊழியர்களுக்கான, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார்.


Next Story