செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி


செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
x

செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

செங்கல்பட்டு

ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் கரூர் வைசியா ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அலாரம் சத்தம் கேட்க தொடங்கியதை தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குற்றவாளியின் தடயங்களையும் சேகரித்து சென்றனர்.

ரூபாய் தப்பியது

ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்கும்போது அலாரம் சத்தம் காரணமாக பல லட்சம் ரூபாய் தப்பியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வில்லியம்பாக்கத்தில் உள்ள கரூர் வைசியா வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story