தென்காசி- அடவிநயினார் அணை பகுதியில் காட்டுத்தீ... தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்


தென்காசி- அடவிநயினார் அணை பகுதியில் காட்டுத்தீ... தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்
x

கோப்புப்படம் 

வேகமாக பற்றி எரிந்துவரும் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணை பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காற்றின் வேகம் காரணமாக தீ அதிக வேகமாக பரவி வருகிறது. வேகமாக பற்றி எரிந்துவரும் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.


Next Story