அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது மருமகள் வரதட்சணை புகார்


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது மருமகள் வரதட்சணை புகார்
x

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார்.

சென்னை,

சோழிங்கநல்லூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில்,

திருமணத்தின்போது 1,000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டன. மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கே.பி.கந்தன் மீதும், அவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story