பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி


பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்தை மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்தை மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் தகவல்

சிவகங்கை மாவட்டம் புதுவயலைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 34). இவரது செல்போன் செயலியில் அதிக லாபம் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் தகவல் வந்தது.

இதை நம்பிய அவர் தன்னிடம் இருந்த ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்தை அந்த தகவலில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கு எண்ணில் செலுத்தியுள்ளார்.

புகார்

பணத்தை பெற்றுக்கொண்ட நபர் அவருடைய பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லையாம். கட்டிய பணத்தையும் தரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாகலட்சுமி இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story