சிவகங்கை: ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி டெய்லரிடம் ரூ.9 லட்சம் மோசடி


சிவகங்கை: ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி டெய்லரிடம் ரூ.9 லட்சம் மோசடி
x

ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக மூன்று பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் குருமூர்த்தி 53) டெய்லராக இருக்கிறார். இவருடைய மகன் பி.இ. படித்துள்ளார். இவருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சி துறையூரைச் சேர்ந்த பிரகாஷ், சென்னையைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் டெல்லியைச் சேர்ந்த கிஷோர் ஆகிய மூன்று பேர்களும் ரூ.9 லட்சம் பெற்று கொண்டார்களாம்.

அதன் பின்னர் அவர்கள் வேலையும் வாங்கித் தரவில்லை மற்றும் வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லை. இது தொடர்பாக குருமூர்த்தி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரிடம் புகார் செய்தார். அவரது பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்


Next Story