கொசுவலையை திரும்ப தராததால் பழ வியாபாரி கழுத்தை நெரித்து கொலை - வடமாநில தொழிலாளர் கைது


கொசுவலையை திரும்ப தராததால் பழ வியாபாரி கழுத்தை நெரித்து கொலை - வடமாநில தொழிலாளர் கைது
x

சென்னையில் கொசுவலையை திரும்ப தராததால் பழ வியாபாரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னையில் கொசுவலையை திரும்ப தராததால் பழ வியாபாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த வடமாநில தொழிலாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பழவியாபாரி ஐம்பெருமாள், அப்பகுதியில் உள்ள பருப்பு குடோனில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பீகார் மாநிலத்தை சேர்ந்த அணில் ஜா என்பவரை கைது செய்தனர்.

தனது கொசுவலையை திரும்ப தராததால் ஐம்பெருமாளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அணில் ஜா தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story