நுங்கம்பாக்கம் மின் மயான மேம்பாட்டு பணி மேலும் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


நுங்கம்பாக்கம் மின் மயான மேம்பாட்டு பணி மேலும் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
x

நுங்கம்பாக்கம் மின் மயான மேம்பாட்டு பணி மேலும் நீட்டிக்கப்படுள்ளது, அதனால் வேலங்காடு, அரும்பாக்கம் மயானத்தை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் கோட்டம் 110-க்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயானபூமியின் மின் தகன மேடையை திரவ பெட்ரோலிய வாயு தகனமேடையாக மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் 3 மாதக் காலங்களுக்கு இந்த மயானபூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நுங்கம்பாக்கம் மயானபூமியில் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஜூலை 14-ந்தேதி வரையில் இந்த மயானபூமி இயங்காது. எனவே மேம்பாட்டு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story