காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்
x

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் கோபுர தரிசனம் நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 4 ராஜ வீதிகள் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட சேவை உற்சவத்தில் சென்னை, காஞ்சீபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story