10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்


10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
x

ஆடித்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று அம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலை மற்றும் வளையல் மாலை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தன.

காஞ்சிபுரம்

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று அம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலின் உட்புறமும், கருவறையிலும் 500, 100, 200, 50 என புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததுடன், அம்மனுக்கும் ரூபாய் நோட்டு மாைலயும் அணிவிக்கப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story