தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு

நாமக்கல்லில் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் நகரில் கடந்த வாரம் சரிவடைந்த தங்கம் விலை, இந்த வாரம் தொடக்கம் முதலே அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக நேற்று முன்தினம் கிராம் ரூ.5,413-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 304-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,563-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுனுக்கு ரூ.1,200 அதிகரித்து ரூ.44 ஆயிரத்து 504-க்கு விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் 'கிடுகிடு' என உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





