ஓய்வு பெறும் நாளில் அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் பணி இடைநீக்கம் மண்டல பொதுமேலாளர் உத்தரவு


ஓய்வு பெறும் நாளில்  அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர்   பணி இடைநீக்கம்  மண்டல பொதுமேலாளர் உத்தரவு
x

ஓய்வு பெறும் நாளில் அரசு பஸ் டிக்கெட் பரிசோதகரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் உத்தரவிட்டு உள்ளார்.

சேலம்

சேலம்,

பணி இடைநீக்கம்

சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன். இவர் சேலம் கோட்ட அரசு பஸ்களில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். மேலும் அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளராகவும் இருக்கிறார்.

நேற்று சென்னகிருஷ்ணன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் சென்னகிருஷ்ணனை நேற்று பணி இடைநீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல பொதுமேலாளர் லட்சுமணன் உத்தரவிட்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, சேலம் கோட்ட அரசு பஸ்களில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றிய சென்னகிருஷ்ணன் இன்று (நேற்று) ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

ஓய்வு பெறும் நாளில் டிக்கெட் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது போக்குவரத்து கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story