அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூரில் அரசு ஊழியர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததுஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை என்ற திட்ட பணியிடத்தை 'உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் மாநில செயலாளர் சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story