அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x

அரசு திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சகாய் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை சிறப்பு செயலாளருமான ஹர் சகாய் மீனா தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், இத்திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை வழங்கினார்.

உடனுக்குடன் செயல்படுத்தி...

மேலும் அரசின் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)ஹஜிதா பேகம், உதவி இயக்குனர்(ஊரகவளர்ச்சி) ரத்தினாமாலா மற்றும் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், ஊராட்சி தலைவர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஏமப்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குளம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


Next Story