காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
x

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் காரணி ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

இக்கூட்டத்துக்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கருத்துக்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சி.ரூபேஷ், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், செல்வகுமார், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் காரணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளின் கரைகளில் 1.5 லட்சம் எண்ணிக்கையில் பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.


Next Story