காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் 1-ந்தேதி நடக்கிறது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் 1-ந்தேதி நடக்கிறது
x

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

கிராம சபை கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், அந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கிராம சபை கூட்டங்களில் ஏதேனும் ஒரு ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சிகள் நடத்தலாம். மேலும் அங்கு அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

ஊழியர்களை அங்கீகரித்தல்

கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story