ஜனநாயகத்தை காப்பதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்
ஜனநாயகத்தை காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கு நடுவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இந்திய பிரஸ் கவுன்சில் 56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நாள் இன்று. தேசிய பத்திரிகையாளர் நாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் நடுவில் பணியாற்றும் நான்காவது தூணான ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story