விழுப்புரம் கோட்ட அளவிலானமாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது


விழுப்புரம் கோட்ட அளவிலானமாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 3 April 2023 6:45 PM GMT (Updated: 3 April 2023 6:45 PM GMT)

விழுப்புரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

விழுப்புரம்


விழுப்புரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்களுக்குட்பட்ட அனைத்து முதல்நிலை அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story