மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் ராஜன், ஒன்றிய செயலாளர் சாமியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகர தலைவர் குமார், மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதைத்தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 3 மாதமாக கூலி வழங்காததை கண்டித்தும், மேலும் ஊதியத்துடன் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று என்பதை வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story