தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பீல்வாடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 49), கூலி தொழிலாளி. இவர் மது குடித்துவிட்டு தனது மனைவி தனமணியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ராமசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story