கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
x

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும். பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல்-கற்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும்.

இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும். பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக கிராம பஞ்சாயத்துகளின் ஆலோசனையைப் பெற்று, கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீண்டும் அடுத்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story