குணமளிக்கும் மாதா ஆலய தேர்பவனி

குணமளிக்கும் மாதா ஆலய தேர்பவனி நடந்தது.
திருச்சி, கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலயத்தில் 30-ம் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து அன்பிய விருந்தும், திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசியுடன் விழா நிறைவடைந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





