குணமளிக்கும் மாதா ஆலய தேர்பவனி


குணமளிக்கும் மாதா ஆலய தேர்பவனி
x

குணமளிக்கும் மாதா ஆலய தேர்பவனி நடந்தது.

திருச்சி

திருச்சி, கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலயத்தில் 30-ம் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து அன்பிய விருந்தும், திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசியுடன் விழா நிறைவடைந்தது.


Next Story