தரகம்பட்டி பகுதியில் கனமழை

தரகம்பட்டி பகுதியில் கனமழை பெய்தது.
தரகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. மாலை 3 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் அரைமணி நேரம் வரை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது. இந்த மழையால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





