தோகைமலை பகுதியில் பலத்த மழை


தோகைமலை பகுதியில் பலத்த மழை
x

தோகைமலை பகுதியில் பலத்த மழை பெய்தது.

கரூர்

தோகைமலை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story