தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது.

மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடியகனமழை தொடரும் என்றும் தமிழகம், புதுவையில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story