மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்


மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
x

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காணப் பட்டது.

செங்கல்பட்டு

கடல் சீற்றம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் 10 மீட்டர் தூர கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் சீறி எழும்பி வந்தன. ராட்சத அலையால் கடல் நீர் முன்னோக்கி வந்ததால் அங்குள்ள கடற்கரை உணவகம், குடியிருப்பு பகுதிகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது.

குறிப்பாக மீனவர் கிராமத்தின் வடக்கு பகுதியில் கற்கள் கொட்டி கடல் நீர் வரத்தை தடுத்தும், கற்கள் தடுப்புகளை தாண்டி கடல் நீர் முன்னோக்கி வந்ததால் அந்த பகுதி மக்களும், மீனவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள். அங்குள்ள கடற்கரை ஓர உணவகங்களில் கடல் அலை மோதிவிட்டு செல்வதால், உணவு விடுதிகள், ராட்சத அலைகள் மோதும் போது மணல் அரிப்பு ஏற்பட்டு தங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பாறை கற்கள் கொட்டி சீறி வரும் அலையின் வேகத்தை குறைத்து தங்கள் உணவு விடுதி கட்டிடங்களை பாதுகாத்து வருகின்றனர்.

கடலுக்குள் செல்லவில்லை

ராட்சத அலைகள் கடற்கரை கோவிலின் வடக்கு பக்க கடற்கரை பகுதி வரை மணற்பரப்பில் சீறி எழும்பி வந்ததால் அந்த பகுதி மணற்பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு மழை நீரில் நிரம்பிய ஏரி, குளம் போல் காட்சி அளித்தது. மேலும் ராட்சத அலையில் மீன்பிடி வலைகள் அடித்து செல்லாமல் இருக்க கரைப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த மீன்பிடி வலைகள், துடுப்பு, மீன்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் டிரம், படகு என்ஜின் போன்ற மின்பிடி சாதனங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்தி வைத்தனர். அதேபோல் படகுகளையும் ராட்சத அலைகள் வராத வகையில் கடற்கரையில் இருந்து சிறிது தூரம் உள்ள நீண்ட மணற்பகுதி உள்ள இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்தனர்.

நேற்று கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம், வெண்புருஷம், நெம்மெலிகுப்பம், பதுஎடையூர்குப்பம் உள்ளிட்ட மீனவர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.


Next Story