ஊரக உள்ளாட்சி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை-கலெக்டர் கார்மேகம் உத்தரவு


ஊரக உள்ளாட்சி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை-கலெக்டர் கார்மேகம் உத்தரவு
x

ஊரக உள்ளாட்சி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் கார்மேகம் அறிவித்து உள்ளார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் சேலம், மேச்சேரி, தலைவாசல், காடையாம்பட்டி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story