கல்லால் அடித்து ஹோட்டல் தொழிலாளி கொலை - ஒருவர் கைது


கல்லால் அடித்து ஹோட்டல் தொழிலாளி கொலை - ஒருவர் கைது
x

களக்காடு அருகே கல்லால் அடித்து தொழிலாளியை கொலை செய்த வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

திருநெல்வேலி


நெல்லை மாவட்டம்,களக்காடு வியாசராஜபுரத்தை சேர்ந்தவர் பீர்முகைதீன் (வயது 65). இவருக்கு திருமணமாகி மைதீன்பீவி என்ற மனைவியும்,ஒரு மகனும்,மகளும் உள்ளனர். பீர்முகைதீன் களக்காட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இவர் இரவு பணி முடிந்ததும் களக்காடு புதிய பஸ் நிலையம் முன்பு சவளைக்காரன்குளத்தை சேர்ந்த தொழிலாளி ஜெயபால் (55) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்படடுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபால், பீர்முகைதீனை கல்லைக் கொண்டு தாக்கியுள்ளார்.

இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த பீர்முகைதீன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த களக்காடு போலீசார் பீர்முகைதீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயபாலை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story