அடுக்குமாடி குடியிருப்பில்மானிய விலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள்விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


அடுக்குமாடி குடியிருப்பில்மானிய விலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள்விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 23 March 2023 7:00 PM GMT (Updated: 23 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அரூர் பகுதியில் நம்பிபட்டி, பீச்சான் குட்டை, பி.மல்லாபுரம் பகுதியில் கொண்டகர அள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மோளையானூர், பென்னாகரம் பகுதியில் போடூர், காரிமங்கலம் பகுதியில் முக்குளம், நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்பு மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மேற்கண்ட பகுதிகளில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பயனாளிகளின் பங்கு தொகை செலுத்த விருப்பமுள்ள மாற்று திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். அடுக்குமாடி குடியிருப்புகளின் மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீதஇட ஒதுக்கீட்டின்படி முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெறலாம். இது தொடர்பாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தர்மபுரி என்ற முகவரியில் விண்ணப்பிக்க இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story