ரெட்டிச்சாவடி அருகே வீடு புகுந்து நகை திருட்டு


ரெட்டிச்சாவடி அருகே     வீடு புகுந்து நகை திருட்டு
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

ரெட்டிச்சாவடி அருகே வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரெட்டிச்சாவடி,

ரெட்டிச்சாவடி அடுத்த பழைய மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலைமுருகன் (வயது 37). இவர் சம்பவத்தன்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 3¾ பவுன் நகைகள், 100 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. திருமலைமுருகன் வீட்டின் கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் வரண்டாவில் படுத்திருந்ததை நோட்டமிட்ட மர்மநபர், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story