வீடு புகுந்து நகை திருட்டு


வீடு புகுந்து நகை திருட்டு
x

விருதுநகரில் வீடு புகுந்து நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்


விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி முத்தமிழ் வீதியில் வசிப்பவர் கண்ணன் (வயது 56). இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்று விட்டார். இந்தநிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது வீட்டு கதவு உடைந்து கிடப்பதாக தகவல் அளித்தனர். இதையடுத்து அவர் சென்னையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story