தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி வரும் 11-ம் தேதி நடக்கிறது- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு


தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி வரும் 11-ம் தேதி நடக்கிறது- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
x

தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி வரும் 11-ம் தேதி நடக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளும், அமைப்புகளும் 11-ந்தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துகிறது. வளர்ச்சி மற்றும் அமைதியை பாதுகாக்கவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர், இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள் என அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் 11-ம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணாசாலை பெரியார் சிலையிலிருந்து துவங்கி அண்ணாசிலை, எல்.ஐ.சி. வழியாக அண்ணாசாலையில் மனிதச்சங்கிலி நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Next Story