திருடிய நகைகளை வைக்காவிட்டால் கோழி குத்தி செய்வினை - பேனரில் வார்னிங் கொடுத்த உரிமையாளர்


திருடிய நகைகளை வைக்காவிட்டால் கோழி குத்தி செய்வினை - பேனரில் வார்னிங் கொடுத்த உரிமையாளர்
x

தன்னிடம் திருடிய நகைகளை திருப்பி தராவிட்டால் கோவிலில் கோழி குத்தி செய்வினை வைக்கப்படும் என்று உரிமையாளர் பேனர் வைத்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 15-ம் தேதி அன்று குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். வீட்டினை பூட்டி சாவியை வெளியிலேயே ஒரு இடத்தில் மறைவாக வைத்து சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ராமசாமி சென்றதும் வீட்டினுள் புகுந்துள்ளனர். இதில் வீட்டினுள் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாயையும் திருடி சென்றுள்ளனர். திரும்பி வந்த ராமசாமி நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாரிடம் புகாரளித்தார். எனினும் இதுவரை நகைகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ராமசாமி வினோத முயற்சியில் இறங்கினார். இதில் தனது தெருவின் முக்கில் ஒரு பேனரை வைத்துள்ளார். இந்த பேனரில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமசாமி வீட்டில் நகைகள் திருடுபோய் உள்ளது. வெள்ளாங்கோவிலை சேர்ந்த எவரும் நகைகளை எடுத்திருந்தால் திருப்பி வைத்து விடுங்கள், இல்லை என்றால் கோவிலில் கோழி குத்தி செய்வினை வைக்கப்படும். இதனால் எடுத்தவர்கள் குடும்பமே பாதிக்கப்படும். எனவே நகைகளை வைத்து விடுங்கள் , என்று எழுதப்பட்டுள்ளது.

திருடு போன நகைகளை மீட்க செய்வினை வைக்கப்படும் என்று வார்னிங் கொடுத்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story