போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு


போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x

போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல் (மாவட்ட குற்றப்பிரிவு), வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), ஜனனி பிரியா (மங்களமேடு சரகம்) ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 22 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மீண்டும் புதிய பஸ் நிலையம் செல்ல போலீசார் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி தெரிவித்தார்.


Next Story