தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா
x

கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டில் நேற்று 791 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 13 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டங்களில் தலா 4 பேருக்கும், காஞ்சீபுரம், திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், மயிலாடுதுறை, நீலகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவடங்களில் தலா ஒருவருக்கும் என 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story