மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தடுக்காததால் அரசு பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்

அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனையை நடைபெற்று வருவதாகவும், அதனை போலீசார் தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவ்வழியாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சாலையில் உடைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் கானப்பட்ட நிலையில், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





