போடியில்ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ளநோட்டுகளை செலுத்திய வியாபாரி


போடியில்ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ளநோட்டுகளை செலுத்திய வியாபாரி
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடியில் ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ளநோட்டுகளை செலுத்திய வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

போடியில், தேவாரம் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த வங்கி மேலாளர் கார்த்திக் (வயது 43), ஏ.டி.எம். எந்திரத்தை அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று அவர் அந்த எந்திரத்தில் பணம் சரியாக வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். அப்போது ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தன. இதையடுத்து அவர் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், போடியை சேர்ந்த டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் என்பவர் ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ள நோட்டுகளை செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story