தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை


தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை
x

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ராமு (வயது 58). தையல் தொழிலாளி. இவருக்கு மகேஷ்வரன்(26), சிங்காரவேல் என்ற மகன்கள் இருந்தனர். என்ஜினீயரிங் படித்துள்ள இவர்கள், வேலை கிடைக்காததால், வீட்டில் இருந்து வந்தனர்.

இதற்கிடையே சிங்கார வேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடன் பிரச்சினையால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்பட்டது. தம்பியின் இழப்பு மகேஷ்வரனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மனவிரக்தியில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, வீட்டில் இருந்த போது விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி இருந்த அவரை, மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தந்தை ராமு கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story