ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2,209 கனஅடியாக அதிகரிப்பு


ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2,209 கனஅடியாக அதிகரிப்பு
x

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2,209 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஓசூர்,

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், ஓசூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2 வது நாளாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,370 கனஅடிநீர் வந்த நிலையில் இன்று 839 கனஅடி நீர் அதிகரித்து வினாடிக்கு 2,209 கனஅடி நீர் அணைக்கு வந்தது.

அணையின் பாதுகாப்புக் கருதி, 2,020 கனஅடிநீர் அணையில் உள்ள 7 மதகுகளின் வழியாக திறந்து விடப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து, கரைபுரண்டு ஓடுகிறது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28அடிகளில், 42.64 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடகா மாநில ஆற்றங்கரையோர தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுகள், கெலவரப்பள்ளி அணை நீரில் கலந்து தெண்பெண்ணை ஆற்றில் வெளியேறி ரசாயன நுரை குவியல், குவியலாக பொங்கி காற்றில் பறப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story