மீன்கள் விலை உயர்வு;1 கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கு விற்பனை

திருவாரூரில் மீன்கள் விலை உயர்ந்துள்ளதால் 1 கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல் கொடுவா, பாறை மீன்கள் ரூ.300-க்கு விற்பனையானது.மேலும் மொத்த விற்பனையில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கூறினா்.
திருவாரூரில் மீன்கள் விலை உயர்ந்துள்ளதால் 1 கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல் கொடுவா, பாறை மீன்கள் ரூ.300-க்கு விற்பனையானது.மேலும் மொத்த விற்பனையில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கூறினா்.
மீன் விற்பனை
பெரும்பாலான வீடுகளில் மீன், ஆடு, கோழி இறைச்சிகளை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் ஆகிய காலங்களில் எப்போதும் இறைச்சி விற்பனை அதிகளவில் இருக்கும். திருவாரூர் நகரில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த மீன் கடைகளுக்கு நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று திருவாரூரில் மீன் விற்பனை மும்முரமாக நடந்தது.
நேற்று மீன்கள் வரத்து எப்போதும் போல் இருந்தது. விலையும் உயர்ந்து காணப்பட்டது. சங்கரா மீன் ரூ.300-க்கும், ரூ.650-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.800-க்கும், ரூ.250-க்கு விற்பனையான இறால் ரூ.350-க்கும், ரூ.80-க்கு விற்பனையான மத்தி மீன் ரூ.100-க்கும், ரூ.350-க்கு விற்பனையான வவ்வால் மீன் ரூ.600-க்கும் விற்பனையானது. கொடுவா, பாறை, நண்டு விலைகள் மாற்றம் இல்லாமல் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது.
சிறிய கடைகள்
இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-
திருவாரூருக்கு 4 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பெரும்பாலும் நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து தான் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மீன்கள் வரத்து எப்போதும் போல தான் உள்ளது. வௌிமாநிலங்களுக்கு மீன்கள் அனுப்பி வைப்பதால் உள்ளூர் பகுதிகளுக்கு மீன் கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்படுகிறது.
அவ்வாறு கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. பாதுகாத்து விற்பனை செய்ய முடியாததால் அன்றைய விற்பனைக்கு மட்டும் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். பல்வேறு இடங்களில் சிறு, சிறு கடைகள் அமைக்கப்பட்டு விட்டதால் மொத்த விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.






