விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!


விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!
x
தினத்தந்தி 28 Dec 2023 3:00 AM GMT (Updated: 28 Dec 2023 4:15 AM GMT)

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. காவல் உதவி ஆணையர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் விஜயகாந்த் வீட்டின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை 9 மணியளவில் மருத்துவ அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.


Next Story