ஜூன் 2 ஆம் தேதி ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்


ஜூன் 2 ஆம் தேதி ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
x

ஜூன் 2 ஆம் தேதி ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை,

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் குறித்தும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story