திருவள்ளூர் மாவட்டத்தில் 7-ந்தேதி முதல் ஜமாபந்தி; பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்


திருவள்ளூர் மாவட்டத்தில் 7-ந்தேதி முதல் ஜமாபந்தி; பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர்

ஜமாபந்தி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1431-ம் ஆண்டுக்கு ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் கீழ்கண்டவாறு அலுவலர்கள் நியமனம் செய்து மற்றும் தணிக்கை தேதிகள் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஆர்.கே.பேட்டை பகுதியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகி்ற 7,8,9, 10 மற்றும் 14 ஆகிய 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

அதேபோல ஆவடியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருகிற 7, 8,9,10 14 ஆகிய 5 நாட்களும், பூந்தமல்லியில் திருவள்ளூர் வருவாய் ஆர்.டி.ஓ. தலைமையில் வருகின்ற 7,8, 9,10, 14,15 ஆகிய 6 நாட்களும், பொன்னேரியில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் வருகிற 7, 8, 9,10, 14,15,16, 17,21, 22,23, 24,28, 29, 30 ஆகிய 15 நாட்களும், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் கலால் உதவி ஆணையர் தலைமையில் வருகிற 7, 8, 9,10, 14, 15, 16 ஆகிய 7 நாட்களும், திருத்தணியில் திருத்தணி ஆர்.டி.ஓ. தலைமையில் வருகிற 7, 8,9, 10,14, 15,16, 17, 21 ஆகிய 9 நாட்களும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

திருவள்ளூர்

ஊத்துக்கோட்டையில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் வருகிற 7,8, 9, 10, 14,15,16 ஆகிய 7 நாட்களும், திருவள்ளூரில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தலைமையில் வருகிற 7, 8, 9, 10,14, 15,16,17,21,22, 23, 24 ஆகிய 12 நாட்களும், பள்ளிப்பட்டில் திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் வருகிற 7, 8, 9, 10 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பொதுமக்கள் முன்னதாகவே தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

ஜமாபந்திக்கு முன்னர் அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது வருவாய் தீர்வாயம் என்று குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு வருவாய் அலுவலர் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஜமாபந்தி நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story