பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு


பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு
x

மதுரை மல்லி நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்கலை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லி கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மதுரை மல்லி இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், பிச்சி மற்றும் முல்லை பூக்கள் கிலோ 2,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 2,000 ரூபாய்க்கும், சம்பங்கி மற்றும் செவ்வந்தி பூக்கள் கிலோ 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்த போதிலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.


Next Story